3,200 பயணிகள் விமான நிலையத்தில் முடக்கம்! - ஆறாவது படுகொலை! - உச்சக்கட்ட பரபரப்பில் Nouvelle-Calédonie!

18 வைகாசி 2024 சனி 08:22 | பார்வைகள் : 12956
**
Nouvelle-Calédonie தீவில் ஏற்பட்டுள்ள பெரும் வன்முறை காரணமாக அங்கு விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தலைநகர் Noumea தீவில் உள்ள விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமையில் இருந்து மூன்று விமானங்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் அங்கு 3,200 பயணிகள் அங்கிருந்து புறப்பட முடியாமல் தவித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
நேற்று பிரான்ஸ் நேரம் பிற்பகல் 2.30 மணி அளவில் ( Nouvelle-Calédonie நேரப்படி மாலை 5.30) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தோடு, Nouvelle-Calédonie தீவில் இடம்பெற்று வரும் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.
**
ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருப்பது அறிந்ததே. இந்நிலையில், Nouvelle-Calédonie தீவுக்கு தீபம் வரும் ஜூன் 16 ஆம் திகதி கொண்டுசெல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு தீபம் கொண்டுசெல்லப்படமாட்டாது என பிரதமர் கேப்ரியல் அத்தால் அறிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025