Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

■ இரண்டாவது ஜொந்தாம் வீரர் பலி!

■ இரண்டாவது ஜொந்தாம் வீரர் பலி!

16 வைகாசி 2024 வியாழன் 10:34 | பார்வைகள் : 11599


பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் கடந்த ஒருவாரமாக வன்முறைகள் இடம்பெற்று வருவது அறிந்ததே. இந்நிலையில், அங்கு இரண்டாவது ஜொந்தாம் வீரர் கொல்லப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இதனை இன்று மே 16, வியாக்கிழமை அறிவித்தார். ஆனால் இந்த உயிரிழப்பு தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் இடம்பெற்று வரும் தீவின் தலைநகரான Noumea இல் இச்சம்பவம் இடம்பெற்றது.

முன்னதாக, இந்த கலவரத்தின் போது ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய ஜொந்தாம் வீரர் கொல்லப்பட்டிருந்தார். 

மொத்தமாக தற்போது அங்கு இரு ஜொந்தாமினர் உட்பட ஐவர் பலியாகியுள்ளனர். 130 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்