சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்! - Seine-et-Marne மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம்!

15 வைகாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 15940
சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, கைதி ஒருவர் தப்பித்த சம்பவம் அறிந்ததே. இதில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலின் போது ஆயுததாரிகள் இரு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்று Pontault-Combault (Seine-et-Marne) நகரில் சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் சிறைச்சாலை வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு அதில் பயணித்த Mohamed Amra எனும் கைதியை தப்பிக்க வைத்துள்ளனர். இதில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களும் எரியூட்டப்பட்ட நிலையில் Houetteville மற்றும் Gauville-le-Campagne (Eure) நகரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025