Neuilly-sur-Seine : பெண் மீது கத்திக்குத்து!
13 வைகாசி 2024 திங்கள் 17:54 | பார்வைகள் : 8843
பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இன்று மே 13 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Place du Général-Gouraud பகுதியில் வைத்து மாலை 5.30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய பெண் ஒருவர் மூன்று தடவைகள் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது 12 வயது மகன் சம்பவ இடத்தில் இருந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவர் Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan