பரிஸ் : வீதியில் வைத்து கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் தேடப்படுகின்றனர்..!!

11 வைகாசி 2024 சனி 09:11 | பார்வைகள் : 7681
பரிசில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வீதி ஒன்றில் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
மே 10 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணி அளவில் avenue Brunetière வீதியில் வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய ஒருவரை வழிமறித்த இருவர், அவரை கத்தியால் குத்தியுள்ளனர். அடி வயிற்றிலும், முதுகிலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலாளிகள் இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.