Yvelines : தோல்வியில் முடிந்த பார்பிகியூ தயாரிக்கும் முயற்சி! - இருவர் மருத்துவமனையில்..!!

9 வைகாசி 2024 வியாழன் 16:57 | பார்வைகள் : 9128
Triel-sur-Seine (Yvelines) நகரில் வசிக்கும் சிலர் பார்பிகியூ உணவு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, விஷவாயு பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மே 8, நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காற்றில் விஷவாயு பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
Meulan-Les-Mueaux நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.