கண்டெடுக்கப்பட்ட உடலம் காணாமற்போன இளைஞனுடையதா?

4 சித்திரை 2024 வியாழன் 19:32 | பார்வைகள் : 12443
நோந்த் நகரத்தின், சேவ்ர் நதிப்பகுதி நகரமாக மொன்கூட்டோன் (Moncoutant-sur-Sèvre - Deux-Sèvres) இல் ஒரு இளைஞனின் உடலம் நீரிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது கடந்த பெப்ரவரி மாதம் 10ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில், கேளிக்கை விடுதியில இருந்து வெளியேறிய ஏர்வான் (Erwan) எனும் இளைஞனின் உடலமாக இது இருக்குமோ என்ற நோக்கில், காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்டமாக இந்த உடலத்தின் DNA (ADN) பரிகோதனை செய்யப்பபட உள்ளது. இதன் பின்னரே இது ஏர்வானின் உடலமா என்பதை உறுதி செய்யமுடியும் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போன எமிலின் உடல் எச்சங்கள் கிடைத்ததையடுத்து, காணாமற்போன ஏர்வானின் உடலமாக இது இருக்குமோ என்ற சந்தேகம், காணாமற்போனவர்கள் உடலங்களாகத் தான் கிடைப்பார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025