2023 ஜுன் : இரவுநேர வன்முறை! - செனட் சபையில் இன்று அறிக்கை வாசிப்பு!!
3 சித்திரை 2024 புதன் 08:16 | பார்வைகள் : 10501
நஹேல் எனும் இளைஞன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை ஞாபகம் இருக்கலாம். கடந்த 2023 ஆண்டு ஜூன் மாததில் இரவு நேரத்தில் பலத்த வன்முறை பதிவாகியிருந்தது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியும், வாகனங்களை எரியூட்டியும் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்படி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் செனட் மேற்சபையில் இன்று ஏப்ரல் 3 ஆம் திகதி புதன்கிழமை சேதவிபர அறிக்கை வாசிக்கப்பட உள்ளது.
மொத்தமாக 24,000 தீயூட்டல் சம்பவம் இடம்பெற்றதாகவும், 12,000 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் , 2,500 கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அவற்றில் 168 பாடசாலைகள் மற்றும் 105 நகரசபைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, 3,500 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan