இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம்: 2வது செயற்கைக்கோள் ஏவுதல் சோதனை வெற்றி

31 பங்குனி 2024 ஞாயிறு 12:02 | பார்வைகள் : 7674
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் அதன் 2வது செயற்கைக்கோள் ஏவுதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) அதன் Vikram-1 செயற்கைக்கோளை ஏவுகணையில் இருந்து வெற்றிகரமாக இரண்டாவது முறையாக ஏவியது.
நிறுவனம் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் சோதனை ஓட்டத்தில் தனது கேரியரில் இருந்து கலாம்-250 என்ற ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
'இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மற்றொரு சாதனையை படைத்துள்ளது, நமது கலாம்-250 ரொக்கெட் சோதனை ஏவலில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளது.
இன்னும் சில நாட்களில், இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் அதிகாரப்பூர்வமாக சுற்றுவட்டப் பாதையில் பறக்கும்." என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் சந்திரா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025