அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத்தலம்!

27 பங்குனி 2024 புதன் 05:05 | பார்வைகள் : 7296
ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜாவிக் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
அதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது எரிமலை எரிமலைக்குழம்புகளை கக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த எரிமலைக்கு அருகில் உள்ள கிரின்டாவிக் நகரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் இப்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளூ லகூன் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிமலையைச் சுற்றி விமானங்கள் செல்வதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என வெளியாகியுள்ளது.