பிரான்சில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் மூளைக்காய்ச்சல் அவதானம். மருத்துவப் பேராசிரியர் Robert Cohen.

27 சித்திரை 2024 சனி 06:20 | பார்வைகள் : 8524
முன்னர் இல்லாத அளவுக்கு குழந்தைகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் நோய் பிரான்சில் அதிகரித்து வருவதாக l'Hôpital de Créteil மருத்துவமனையின் குழந்தை தொற்று நோய் நிபுணரும், தேசிய தொழில்முறை குழந்தை மருத்துவ கவுன்சிலின் தலைவருமான பேராசிரியர் Robert Cohen தெரிவித்துள்ளார்.
COVID-19 பாதிப்புக்கு பின்னரான காலப்பகுதியில் மூளைக்காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் மத்தியில் மேலும் அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து 570 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசியை 2025 ஆம் ஆண்டுக்கு முன் குழந்தைகளுக்கு வழங்குவதை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்படும் போது பெரியவர்களை விட மிகப் பெரும் பாதிப்பையும் ஆபத்துகளையும் அது விளைவிக்கும் எனவும் மருத்துவ பேராசிரியர் Robert Cohen தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1