காசாவில் குழந்தைகளின் பரிதாப நிலை! ஐ நா பகீர் தகவல்
20 சித்திரை 2024 சனி 07:51 | பார்வைகள் : 6489
காசாவில் 10 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீனிய குழந்தை பாதிக்கப்படுவதை ஐ நா அமைப்புகள் கண்டிக்கின்றன.
ஐ நா குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஐ நா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் (OCHA) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
UNICEF அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறார்கள்.
இந்த எண்ணிக்கை காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
OCHA வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 1 முதல் வெள்ளி வரை வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% "இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளன".
ஐ.நா வலியுறுத்தல் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன.
குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan