பாடசாலை மாணவிகள் மீது கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் பலி!
19 சித்திரை 2024 வெள்ளி 07:10 | பார்வைகள் : 18995
பாடசாலை மாணவிகள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தாக்குதல் சம்பவம் பிரான்சின் கிழக்கு நகரமான Souffelweyersheim இல் நேற்று ஏப்ரல் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய சிறுமி ஒருவரையும் 11 வயதுடைய சிறுமி ஒருவரையும் நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் 11 வயதுடைய சிறுமி இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படடுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan