Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூர் பிரதமர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு

சிங்கப்பூர் பிரதமர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு

16 சித்திரை 2024 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 1648


சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் 15  திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் 3வது பிரதமரான இவர், 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக 02 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் மே 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

லாரன்ஸ் வோங் பதவி விலகும் அன்றே பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்