Paristamil Navigation Paristamil advert login

ஒரு பெரும் மோதலைத் தவிர்க்க தேவையான அனைத்தும் செய்வேன்! - ஜனாதிபதி மக்ரோன் சூழுரை!

ஒரு பெரும் மோதலைத் தவிர்க்க தேவையான அனைத்தும் செய்வேன்! - ஜனாதிபதி மக்ரோன் சூழுரை!

15 சித்திரை 2024 திங்கள் 10:22 | பார்வைகள் : 11349


மத்திய கிழக்கு எங்கும் பரவியுள்ள போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர - வேண்டிய அனைத்தையும் செய்வேன் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களத்தில் குதித்துள்ளதால், மத்திய கிழக்கில் பெரும் யுத்தம் வெடிக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், 'யுத்தம் வெடிக்காம தடுப்பதற்குரிய அனைத்தையும் செய்வேன்!' என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.

'இஸ்ரேல் தாக்குவதாக நாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது. தற்போது திருப்பி தாக்குகிறது. பிரான்ஸ், அமெரிக்கா பிரித்தானியா போன்ற வல்லரசுகள் உக்ரேனின் பக்கம் நிற்கிறது எனவும் தெரிவித்தார்.