Ronald விற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

11 சித்திரை 2024 வியாழன் 09:44 | பார்வைகள் : 6195
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல் நாசர் (Al-Nassr) நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நடத்தையால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
திங்கட்கிழமை அபுதாபியில் அல் ஹிலாலுக்கு (Al-Hilal) எதிரான ஆட்டத்தின் போது Red Card காட்டிய நடுவரை தாக்கியதற்காக அவருக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டது.
அல் ஹிலாலுக்கு எதிரான சவுதி சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியின் ஒரு பகுதியாக, 86வது நிமிடத்தில் அலி அல் புலைஹியை முழங்கையால் தூக்கியதற்காக நடுவரால் ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரொனால்டோ நடுவரையும் அடிக்க கை ஓங்கினார். இந்தக் காணொளி வெளியாகி வைரலானது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025