பம்பலப்பிட்டியில் துப்பாக்கி பிரயோகம்!

7 ஆவணி 2023 திங்கள் 15:40 | பார்வைகள் : 7859
பம்பலப்பிட்டி - கரையோர வீதிக்கு அப்பால் மகிழுந்து ஒன்றை இலக்கு வைத்து இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வேன் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் சம்பவ இடத்திலிருந்து குறித்த இரண்டு வாகனங்களும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியிலிருந்து வெற்று தோட்டா உறைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.