யாழில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் மரணம்

27 மாசி 2024 செவ்வாய் 12:25 | பார்வைகள் : 8012
தவறான முடிவெடுத்து ஆணொருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் திங்கட்கிழமை (26) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025