இவ்வருடத்தில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிப்பு!!

25 பங்குனி 2024 திங்கள் 16:05 | பார்வைகள் : 8017
இவ்வருடத்தில் இதுவரை இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரான்சில் இந்த தாக்குதல் பேசுபொருள் ஆகியுள்ளது. பிரான்சில் ஜனவரி 1, 2024 முதல் இதுவரை இரண்டு பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) இன்று மார்ச் 25 ஆம் திகதி அறிவித்துள்ளார்.
அதேவேளை, உளவுத்துறையினரின் தரவுகளின் படி 2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 45 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.