Paristamil Navigation Paristamil advert login

பல்பொருள் அங்காடிக்கு முன்பாக வாள் வெட்டு! - ஒருவர் படுகொலை!

பல்பொருள் அங்காடிக்கு முன்பாக வாள் வெட்டு! - ஒருவர் படுகொலை!

17 பங்குனி 2024 ஞாயிறு 07:44 | பார்வைகள் : 11273


பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்பாக நேற்று சனிக்கிழமை மாலை வாள் வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள Onet-le-Château (Aveyron) நகரில் இச்சம்பவம் மார்ச் 16, நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Super U அங்காடியில் இருந்து குறித்த 45 வயதுடைய நபர் வெளியேறிய போது, வெளியே காத்திருந்த ஆயுததாரி ஒருவர், வாள் போன்ற கூரிய ஆயுதத்தினால் அவரை தாக்கியுள்ளார்.

பல தடவைகள் வெட்டப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவருடைய மனைவி சம்பவத்தின் போது அருகில் இருந்துள்ளார். அவர் தாக்கப்படவில்லை. மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்