Paristamil Navigation Paristamil advert login

அவதானம்! - பன்றி இறைச்சியில் ஆபத்து, மீளப்பெறப்படுகிறது!

அவதானம்! - பன்றி இறைச்சியில் ஆபத்து, மீளப்பெறப்படுகிறது!

12 பங்குனி 2024 செவ்வாய் 17:41 | பார்வைகள் : 12741


U Saveurs நிறுவனத்தின் பன்றி இறைச்சியில் ஆபத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றை உண்ண வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பன்றி இறைச்சி துண்டுகள் அடங்கிய பொதியில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் Listeria பக்டீரியா இருப்பதாக எச்சரிக்கப்பட்டு, அவற்றை மீள கையளித்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

ஏப்ரல் 7, 2024 ஆம் ஆண்டு காலவதி திகதி அச்சிடப்பட்ட பொதிகளே மீளப்பெறப்படுகின்றன. குறியீட்டு இலக்கம் 253028000006 இனை சரிபார்க்கவும்.

மார்ச் 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை கடைகளுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த இறைச்சியே மீளப்பெறப்படுகிறது. எனவே பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026