சிறுவர்களது ஆபாச புகைப்படங்கள், காணொளிகள் வைத்திருந்த நால்வர் கைது!!
8 பங்குனி 2024 வெள்ளி 16:41 | பார்வைகள் : 12526
சிறுவர்களது ஆபாசபடங்கள், காணொளிகள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடான இதனை அவர்கள் பணத்திற்காக விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
Versailles (Yvelines) நகர குற்றத் தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், Yvelines மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காணொளி, புகைப்படங்கள் என மொத்தமாக 420,000 கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நால்வருக்கும் ஒரு ஆண்டுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan