பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

31 ஆடி 2023 திங்கள் 07:23 | பார்வைகள் : 10310
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம் பஸார் மாவட்டத்தில் உள்ள கர் என்ற இடத்தில் ஜமைத் உலெமா இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது..
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அதன் போது கூட்டத்திற்கு நடுவே திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
கூட்டத்தில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததுடன் தாக்குதலில் ஜமைத் உலெமா கட்சியின் முக்கிய தலைவரும் பலியாகினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கை கால்களை இழந்த நிலையில், பலரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடனடியாக பொலிசாரும் அவசரகால வீரர்களும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என தெரிய வந்துள்ளது.
எனினும் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1