யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரியால் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா

6 மாசி 2024 செவ்வாய் 04:19 | பார்வைகள் : 4392
ஈழத்து குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் நேற்று கௌரவமளிக்கப்பட்டது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது.
இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில், மருத்துவராக வேண்டும் என்ற தனது இலட்சிய கனவினை அடைய கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.