காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பிச் சென்ற ஒருவர் கைது! - துப்பாக்கி பறிமுதல்!!

5 மாசி 2024 திங்கள் 15:53 | பார்வைகள் : 8274
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் Nîmes (Gard) நகர காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, Renault Clio மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணிப்பதை பார்த்துள்ளனர். அதனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, மகிழுந்து நிற்காமல் வேகமாக தப்பி ஓடியுள்ளது.
பின்னர் காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினர். மகிழுந்துக்குள் நாலுக்கும் மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் அவர்களில் ஒருவரை மட்டு காவல்துறையினரால் கைது முடிந்தது.
ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து Kalashnikov ரக துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பி ஓடியவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025