விவசாயிகளுக்கு வழங்கப்படும் €400 மில்லியன் யூரோக்கள்! - பாரிய இறுக்கத்தில் அரசு!!
3 மாசி 2024 சனி 13:00 | பார்வைகள் : 9991
விவசாயிகளுக்கு அரசு €400 மில்லியன் யூரோக்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. எதிர்பாராத இந்த செலவினால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக €400 மில்லியன் யூரோக்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. அதேவேளை மொத்தமாக 12 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான உதவிகளை பெற உறுதியளித்துள்ளது. ஆனால் இந்த தொகையினால் அரசு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது அதில் இது குறித்து திட்டமிடப்படவில்லை எனவும், இந்தனால் பல வேறுபல நலத்திட்டங்களை நடைமுறப்படுத்துவதில் பாரிய பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan