◉ gare de Lyon தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் கைது!
3 மாசி 2024 சனி 08:30 | பார்வைகள் : 12555
gare de Lyon தொடருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
காலை 8 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் பயணிகள் மீது கத்தி மூலம் கண்மூடித்தமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் *மூவர் காயமடைந்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் தலையிட்டு, தாக்குதலாளியை கைது செய்தனர்.
1992 ஆம் ஆண்டு பிறந்த ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அவர் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan