அமெரிக்காவின் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்...
                    1 மாசி 2024 வியாழன் 16:15 | பார்வைகள் : 10758
செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பலான கேஓஐ என்ற சரக்குகப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட கப்பலொன்று வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது என கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான அம்பிரே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல கடற்படை ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு சொந்தமான கேஓஐஎன்ற கப்பலை இலக்குவைத்துள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன துறைமுகத்திற்கு சென்ற கப்பலையே இலக்குவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan