சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

31 தை 2024 புதன் 07:33 | பார்வைகள் : 6871
சீனாவில் 30 ஆம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,
ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அட்சரேகைக்கு 41.15 டிகிரி வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.
அத்துடன் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025