Paristamil Navigation Paristamil advert login

பரிசை சூழ உள்ள எட்டு நெடுஞ்சாலைகள் இரண்டாவது நாளாக முடக்கம்!

பரிசை சூழ உள்ள எட்டு நெடுஞ்சாலைகள் இரண்டாவது நாளாக முடக்கம்!

30 தை 2024 செவ்வாய் 14:02 | பார்வைகள் : 12081


பரிசில் இருந்து வெளி மாவட்டங்களை இணைக்கும் எட்டு நெடுஞ்சாலைகள் இன்று இரண்டாவது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

A1, A4, A5a,  A6,  A10,  A13,  A15,  A16 ஆகிய எட்டு நெடுஞ்சாலைகள் பகுதி பகுதியாக தடைப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி சாலையை முடக்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று பிற்பகல் பிரதமர் கேப்ரியல் அத்தால் சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் அறிய முடிகிறது.

பிரான்சில் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டம் மெல்ல மெல்ல ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.