Paristamil Navigation Paristamil advert login

 வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் அறிவிக்கப்பட்ட வீசா கட்டுப்பாடுகள்

 வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் அறிவிக்கப்பட்ட வீசா கட்டுப்பாடுகள்

28 தை 2024 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 5264


கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணிகளினால் சர்வதேச மாணவர்களுக்கான வீசா ஒதுக்கீட்டு எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இந்த தீர்மானம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையினால் வகுப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும், பல்கலைக்கழகங்களினால் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் கற்று வரும் வெளிநாட்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்