Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மின்சார தேவை அதிகரிப்பு- பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மின்சார தேவை அதிகரிப்பு- பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

23 மாசி 2024 வெள்ளி 13:41 | பார்வைகள் : 3848


இலங்கையில் தற்போதைய நாட்களில் மின்சார தேவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளாந்த மின்சார தேவை 47 கிகாவோட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரை 50 சதவீதமாக இருந்த நீர்மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தியின் ஊடாக பிறப்பிக்கப்படும் மின்சாரம் என்பவற்றின் உற்பத்தி தற்போது 30 முதல் 35 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்