Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

3வது ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமித்ஷா நம்பிக்கை

3வது ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமித்ஷா நம்பிக்கை

13 மாசி 2024 செவ்வாய் 00:52 | பார்வைகள் : 8554


பா.ஜ., வின் மூன்றாவது ஆட்சியில்  இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த, பின் அமித்ஷா பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பா.ஜ., 370 தொகுதிகளை கைப்பற்றும். பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில், முதல் 5 ஆண்டுகள், காங்கிரஸ் ஆட்சி செய்த போது தோண்டிய குழியை நிரப்புவதில் சென்றுவிட்டது. பிரதமர் மோடி கற்பனை செய்ய முடியாத பல பணிகளை செய்துள்ளார். 

10 ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை வகுத்தார். ஒரு திட்டத்தை வகுத்து, கடின உழைப்புடன் செயல்படுத்தும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்