Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்?

2 தை 2024 செவ்வாய் 04:36 | பார்வைகள் : 8734


பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அதில் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் தாங்களாகவே வெளியேறி விடுவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இன்று பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

பார்வையாளர்களும் போட்டியாளர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டியின் மதிப்பு ஒரு லட்சம் என ஆரம்பித்து மூன்று லட்சம், ஐந்து லட்சம் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு லட்சம் என பணப்பெட்டி மதிப்பு ஆரம்பமான போது கூட ஒரு சைபர் வரும்போது யோசிப்போம் என தினேஷ் கூறுகிறார்.

‘ஒழுங்கா பணப்பெட்டியை எடுத்துட்டு யாராவது ஒருத்தர் கிளம்புங்க’ என்று விசித்ரா சொல்ல அப்போது தினேஷ் ’இந்த சீசனில் யாரும் பணப்பெட்டியை எடுக்க மாட்டார்கள்’ என்று கூறுகிறார்.

மொத்தத்தில் இந்த சீசனில் யாராவது பணப்பெட்டியை எடுத்துவிட்டு கிளம்புவார்களா? அல்லது பணப்பெட்டியை யாரும் எடுக்காமல் இறுதி போட்டியை நோக்கி நகர்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்