Hauts-de-Seine : ஜனாதிபதியின் மகன் வீட்டில் கொள்ளை!!

31 மார்கழி 2023 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 14942
காங்கோ குடியரசு (République du Congo) ஜனாதிபதியின் மகன் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. Neuilly, (Hauts-de-Seine) நகரில் உள்ள வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 23 தொடக்கம் 26 ஆம் திகதி வரையான நாட்களில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், சம்பவத்தின் போது ஜனாதிபதி Denis Sassou Nguesso இன் மகன் வீட்டில் இருக்கவில்லை எனவும் அறிய முடிகிறது.
பூட்டியிருந்த வீட்டினை உடைத்த கொள்ளையர்கள், 18,000 யூரோ, 6,000 டொலர்ஸ் பணமும், சில விலையுயர்ந்த தோல் பொருட்களும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவ் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகைப்படத்தில் : காங்கோ குடியரசின் ஜனாதிபதி மற்றும் அவரது மகன்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025