Yvelines : மகிழுந்து மோதியதில் மூன்று காவல்துறையினர் காயம்!!
29 மார்கழி 2023 வெள்ளி 16:29 | பார்வைகள் : 11253
கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து ஒன்று காவல்துறையினரை மோதித்தள்ளியுள்ளது. இதில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
நேற்று டிசம்பர் 28, வியாழக்கிழமை இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றது. Mantes-la-Jolie to Rosny-sur-Seine ஆகிய நகரங்களை இணைக்கும் வீதியில், மாலை 4.40 மணி அளவில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 26 வயதுடைய ஒருவர் மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்துள்ளார்.
அவர் மகிழுந்தைச் செலுத்தும் விதத்தில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர், அவரைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து, காவல்துறையினர் மீது மோதியது. இச்சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர்.
மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan