Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் முகக்கவசம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் முகக்கவசம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

29 மார்கழி 2023 வெள்ளி 15:29 | பார்வைகள் : 6033


இலங்கையில் கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்