கொழும்பு தாமரை கோபுரத்தில் ஆரம்பமாகும் Bungee Jumping

28 ஆடி 2023 வெள்ளி 11:51 | பார்வைகள் : 9679
கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு Bungee Jumping ஐ ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக Bungee Jumping ஐ, ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் உலகின் மிக உயரமான Bungee Jumping ஆக இது மாறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், “ஸ்கை’ வளைவில் சில மேம்படுத்தல்கள் செய்யப்பட வேண்டுமென நிர்வாகம் கண்டறிந்தது.இதனாலேயே, தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025