சானியா மிர்சா- சோயிப் மாலிக் விவாகரத்து விவகாரம்
18 தை 2024 வியாழன் 12:41 | பார்வைகள் : 6662
முன்னாள் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் விவாகரத்து மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதற்கு காரணம் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்திக்கு இந்தப் பதிவு மேலும் வலு சேர்த்துள்ளது.
சானியா தனது Instagram Storiesல் மேற்கோள் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில்,
"கல்யாணம் கடினம்.. விவாகரத்தும் கடினம்.. குண்டாக இருப்பதும் கடினம்.. ஃபிட்டாக இருப்பதும் கடினம்.. கடனில் சிக்குவது கடினம்.. பொருளாதார ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதும் கடினம்.. தொடர்பு கொள்வதும் கடினம்., தொடர்பு கொள்ளாமல் இருப்பதும் கடினம்.,
இவற்றில் எதை தேர்வு செய்கிறீர்கள்? வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல. இது எப்போதும் கடினம் தான். ஆனால்.. அது நம் கையில்தான் உள்ளது. புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று ஒரு மேற்கோளைப் பகிர்ந்துள்ளார்.
சானியா மிர்சா சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.
2018-ல், அவர்களுக்கு இசான் என்ற மகன் பிறந்தான். கடந்த இரண்டு வருடங்களாக சானியாவும் சோயப்பும் பிரிவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு இருவரும் இதுவரை நேரடியாக பதிலளிக்கவில்லை. பாகிஸ்தான் நடிகை ஆயிஷா உமருடன் மாலிக்கின் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு தொடர்வதாக செய்திகள் வந்தபோது, அந்த செய்தியை ஆயிஷா மறுத்தார்.
இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதும் வதந்திகளுக்கு மேலும் உத்வேகத்தை அளித்து வருகிறது.
சமீபத்தில் சானியா மிர்சா தனது சமூக ஊடக கணக்குகளில் இருந்து சோயப் மாலிக்கின் புகைப்படங்களை நீக்கினார் மற்றும் சோயப் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து சானியா மிர்சாவின் பெயரையும் நீக்கினார்.
சமீபத்தில், சானியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan