இளமையை அதிகரிக்கும் இராசவள்ளி கிழங்கு ..!

16 தை 2024 செவ்வாய் 06:19 | பார்வைகள் : 8338
ஆரோக்கியத்தை பேணி காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் அந்தந்த காலப் பகுதியில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.ஏனெனில் அந்த காலப்பகுதிக்கு தேவைப்படும் சக்தியை அந்த உணவு நமது உடலுக்கு தரும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் கிடைக்கும் இராசவள்ளி கிழங்கின் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதில் விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறன . இதில் இருக்கும் சர்க்கரை மிகவும் தரமானது. இதில் நார்ச்சத்தும் விற்றமின் சி யும் அதிகமாக காணப்படுகின்றன .
இராசவள்ளி கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கிறது . இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் நிதானமாகவே அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இராசவள்ளி கிழங்கு சிறந்தது .
இராசவள்ளி கிழங்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது.
இராசவள்ளி கிழங்கு இளமையைப் பாதுகாக்கும். ஆகையால் இது, இளமையைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த உணவாகத் திகழ்கிறது.
இதில் இருக்கும் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இரத்தக் குழாய்கள் நன்றாக சுருங்கி விரிய உதவி செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
இராசவள்ளி கிழங்கை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆகையால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கண்பார்வை பிரச்சினை உள்ளவர்கள் இராசவள்ளி கிழங்கை சாப்பிட்டால் கண்பார்வையினை கூர்மையடையச் செய்யமுடியும் .
எனவே இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட இராசவள்ளி கிழங்கினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்று ஆரோக்கியத்தினை அதிகரித்துக் கொள்ளுங்கள் .
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025