பாராளுமன்ற உறுப்பினர்களை எலிசே மாளிகைக்கு அழைக்கும் ஜனாதிபதி மக்ரோன்!
13 தை 2024 சனி 07:00 | பார்வைகள் : 18297
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது எலிசே மாளிகையில் வைத்து சந்திக்க உள்ளார்.
ஜனவரி 15, திங்கட்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. பிரான்சின் புதிய அமைச்சராக கேப்ரியல் அத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு சேர்க்கும் முனைப்புடன் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
நேற்று சனிக்கிழமை கேப்ரியல் அத்தால் தலமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan