கிளிநொச்சியில் 47 பவுண் நகைகள் திருட்டு - சிக்கிய சந்தேகநபர்கள்
8 மார்கழி 2023 வெள்ளி 13:40 | பார்வைகள் : 7005
கிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 29ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பிரதான சந்தேக நபர் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களிடமிருந்த திருடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் ஐபோன் ஒன்றும், 198,000 பணம் மற்றும் ஹெரோயின் 430 மில்லி கிராம், வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், உதயநகர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan