Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு...

 பாகிஸ்தான் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு...

7 மார்கழி 2023 வியாழன் 03:07 | பார்வைகள் : 5708


பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்க பாடசாலை அருகே  பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்