Paristamil Navigation Paristamil advert login

யாழில் விபரீத முடிவால் இளைஞர் உயிரிழப்பு

யாழில் விபரீத முடிவால்  இளைஞர் உயிரிழப்பு

29 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 5701


பருத்தித்துறையில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர்  விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம்  நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச் சேர்ந்த  சாருஜன் வயது 22 என்ற இளைஞர் இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சிறு வயதில் தந்தை  பிரிந்த  சென்ற நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில்  இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது 

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்த்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்