Paristamil Navigation Paristamil advert login

மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - பார்வையாளர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!!

மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - பார்வையாளர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!!

27 மார்கழி 2023 புதன் 18:11 | பார்வைகள் : 9445


இன்று புதன்கிழமை காலை ஈஃபிள் கோபுரம் திடீரென மூடப்பட்டது. அதன் ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக கோபுரம் பார்வையிடுவது தடைப்பட்டது.

அதேவேளை, கோபுரத்தின் முற்றம் தொடர்ந்தும் திறக்கப்பட்டிருக்கும் எனவும், அதனை கட்டணங்கள் எதுவும் இன்றி இலவசமாக பார்வையிடமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய நாளுக்குரிய நுழைவுச் சிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு திகதியை மாற்றிக்கொள்ளவோ, இரத்துச் செய்து பணத்தினை மீளப்பெறவோ முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்