இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு முன்பாக தொங்கவிடப்பட்ட கரடி!!

26 மார்கழி 2023 செவ்வாய் 13:27 | பார்வைகள் : 13532
காட்டு விலங்கான கரடி ஒன்று கொலை செய்யப்பட்டு இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றின் முன்பாக தொங்கவிடப்பட்டுள்ளது.
Vigneux-sur-Seine mosque (Essonne) நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் முன்பாக, டிசம்பர் 24 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தைய நாளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலின் முகப்பு வாயிலில் கரடி ஒன்று கட்டப்பட்டு தொடங்கவிடப்பட்டிருந்ததை ஞாயிற்றுக்கிழமை காலை சிலர் பார்வையிட்டனர். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு கரடி அகற்றப்பட்டது.
இந்த இஸ்லாமிய வெறுப்பு செயற்பாட்டில் ஈடுபட்ட சமூகவிரோதிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதேவேளை, மேற்படி செயலுக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனமும் வெளியிட்டுள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025