Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குடும்பத்தினரை ஆயுத முனையில் மிரட்டியவர் கைது! - இரு காவல்துறையினர் காயம்!!

குடும்பத்தினரை ஆயுத முனையில் மிரட்டியவர் கைது! - இரு காவல்துறையினர் காயம்!!

25 மார்கழி 2023 திங்கள் 16:55 | பார்வைகள் : 11362


குடும்பத்தினை துப்பாக்கி முனையில் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் இரு காவல்துறை வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

Blessy (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue des Prés வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றினால்   38 வயதுடைய ஒருவர் தனது குடும்பத்தினை அச்சுறுத்தியுள்ளார். 

அவரை தடுக்க முற்பட்ட வேளையில், அவர் துப்பாக்கிச்சூ மேற்கொண்டுள்ளார். இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

“நிறைந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர், வீட்டுல் இருந்த அனைத்து பொருட்களையும் சேதமாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிய அவர், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார்” என காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

பின்னர் அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்