கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
 
                    11 மார்கழி 2023 திங்கள் 12:08 | பார்வைகள் : 6134
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கனடாவில் வசிக்கும், குறித்த இளைஞரின் உறவினர் ஒருவர் இலங்கையிலுள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan