Paristamil Navigation Paristamil advert login

காஸாவை விட்டு வெளியேறும் கனேடியர்கள்...

காஸாவை விட்டு வெளியேறும் கனேடியர்கள்...

11 கார்த்திகை 2023 சனி 05:14 | பார்வைகள் : 9694


இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்களிடையேயான போர் காரணமாக பல வெளிநாட்டவர்கள் காசா பிரதேசத்தில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் காஸா பிராந்தியத்திலிருந்து சுமார் 266 கனடியர்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காஸாவில் உள்ளுர் நேரம் காலை 7 மணியளவில் கனடியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் ராஃபா எல்லை ஊடாக வெளியேறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 75 மற்றும் 32 என இரண்டு நாட்கள் கனடிய பிரஜைகள் காஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.


கனடிய பிரஜைகள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு உடையவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு காஸாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காஸாவில் இன்னமும் 550 கனடியர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்