Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஜொந்தாம் வீரர் திடீர் மரணம்! - தேசிய அஞ்சலி!

ஜொந்தாம் வீரர் திடீர் மரணம்! - தேசிய அஞ்சலி!

10 கார்த்திகை 2023 வெள்ளி 11:47 | பார்வைகள் : 12389


ஜொந்தாம் வீரர் ஒருவர் கடமையின் போது திடீர் மரணம் அடைந்ததை அடுத்து, அவருக்கு தேசிய அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

கடந்த ஒக்டோபர் Cédric Lillo எனும் ஜொந்தாம் வீரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மரணமடைந்தார். தேசிய கண்காணிப்பு மற்றும் தலையீடு ஜொந்தாம் படைப்பிரிவில் பணியாற்றும் குறித்த வீரருக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை Joigny (Yonne) நகரில் இடம்பெற உள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பிராந்திய ஜொந்தாம் படைப்பிரிவின் தலைமை அதிகாரி, நகரபிதாக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை 7 ஆம் திகதி அவரது குடும்பத்தினரால் Saint-Thibault நகரில் உள்ள தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்